This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Pages

சின்னத்திரைக்கு சவுக்கடி கொடுக்க டி.ஆர்



சின்னத்திரையில் இடம்பெரும் மருத்துவம், ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் புதிய படமொன்று தயாராகி வருகிறது. கலப்படம் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை டைரக்டர் டி.ஆர். இயக்குகிறார். நாயகனாக விஜய் ஆதிக்கும், நாயகியாக கோஸ்ரீயும் அறிமுகமாகிறார்கள். படத்தில் இடம்பெறும் நாயகி கோஸ்ரீயின் கவர்ச்சி காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

டைரக்டர் டி.ஆர்., கூறுகையில், சின்னத்திரையில் வரும் பெரும்பாலான மருத்துவர்களும், ஜோதிடர்களும் நம்பிக்கை தருவதற்கு பதிலாக பயமுறுத்தி விட்டுப் போய் விடுகிறார்கள். இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் புது எழுச்சியுடன் மீண்டும் தன்னம்பிக்கை மனிதர்களாக மாறுவதே கலப்படம் படத்தின் கதைக்களம், என்றார். படத்தின் சூட்டிங்கை கொடைக்கானலில் ஒரே ஷெட்யூலில் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

வேதிகாவின் அவதாரம்!

முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக்கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதியபடமான பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங்கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கிறது. இதனால் அம்மணி ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தாண்டு எனக்கு ஆரம்பமே சிறப்பாக அமைந்து இருக்கிறது. முதலாவதாக பானம் படத்திற்காக ஆந்திர விருது, அப்புறம் டைரக்டர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்தது, புதிதாக வீடு வாங்கியிருப்பது என்று அமர்க்களமாய் அமைந்துள்ளது. பாலா சார் படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரள போகிறார்கள். இதுவரை நான் நடித்திராத ஒரு ரோல் இந்தபடத்தில் எனக்கு கிடைத்து இருக்கிறது. படத்தில் என்னுடைய தோற்றம், பேச்சுவழக்கு, உடலமைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதேசமயம் மிரளவும் செய்யும் என்றார். மேலும் கோலிவுட்டில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.